நீர் நிலைகளின் பராமரிப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம்

நீர் நிலைகளின் பராமரிப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நாமக்கலில் நீர் நிலைகளின் பராமரிப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை& மாணகம் அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை இணைந்து திருச்செங்கோடு பகுதியில், நீர் நிலைகளின் பராமரிப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சென்னை எக்ஸ்னோரா அமைப்பின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளை பராமரிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத்ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில்,நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவர் T. T பரந்தாமன் செயலாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் மகேஷ் குமார்,இணை செயலாளர் கலையரசி, ஜெயக்குமார் ,நாகராஜன் ,

வெங்கட்,தீபக், ஸ்ரீதர் . உள்ளிட்ட பொறுப்பாளர்கள், கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் GreenFelow கிஷோர் ,கலந்து கொண்டு நீர் நிலைகளை பராமரித்தல் தலைப்பில் விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார் . திருச்செங்கோடு பகுதியில் 5 குளங்களை தூர்வாரி பராமரித்து வருவது என தீர்மானிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் மூலம் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story