வாஜ்பாயிடம் இருந்த நாகரீகம் மோடியிடம் இல்லை: செல்வப்பெருந்தகை

வாஜ்பாயிடம் இருந்த நாகரீகம் மோடியிடம் இல்லை: செல்வப்பெருந்தகை

செய்தியாளர்களை சந்தித்த செல்வ பெருந்தகை 

வாஜ்பாயிடம் இருந்த நாகரீகம் மோடியிடம் இல்லை என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பச்சேரி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை, காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு ஒரு செங்கலையும் எடுத்து வர முடியாது.

காவிரி பிரச்சினையில் கர்நாடகா அரசு அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் இலக்கே பெருந்தலைவர் காமராசரின் ஆட்சியை கொண்டு வருவது தான் என்ற அவர், வாஜ்பாயிடம் இருந்த நாகரீகம் மோடியிடம் இல்லை. அதைவிட மோடியின் சிஷ்யன் அண்ணாமலைக்கு சிறிதளவு கூட நாகரிகம் இல்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும். அப்போது நீட் தேர்வு, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப தேவை அல்லது தேவை இல்லை என்பதை அவர்களாகவே முடிவெடுத்துக் கொள்ளலாம் என பேசினார்.

Tags

Next Story