வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கும் பணி
கலெக்டர் தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கும் பணி
ஸ்ரீ பெரும்புதூா் மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கும் பணி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீ பெரும்புதூா் மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக குலுக்கல் முறையில் ஒதுக்கும் பணி வேட்பாளா்கள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவருமான ச.அருண்ராஜ், தலைமையில் நடைபெற்றது.

மதுரவாயல், அம்பத்தூா், ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், பல்லாவரம், மற்றும் தாம்பரம் தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக குலுக்கல் முறையில் ஒதுக்கும் பணிகள் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அசோக் சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, வருவாய் அலுவலா் லீலா (சாலை பராமரிப்பு, சென்னை), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story