செல்லம்பட்டியில் பாஜக பரப்புரையில் பாமக பொருப்பாளருக்கு மண்டை உடைப்பு

செல்லம்பட்டியில் பாஜக பரப்புரையில் பாமக பொருப்பாளருக்கு மண்டை உடைப்பு
மோதலில் ஈடுபட்ட கட்சியினர்
செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பரப்புரையில் பாமக பொருப்பாளரின் மண்டை உடைககபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் இரவு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நரசிம்மன் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

பரப்புரைக்காக செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாமக ஒன்றிய துணை செயலாளர் ரங்கன் (55) என்பவரிடம் கொடி கட்டுவதற்கும் மற்ற செலவினங்களுக்காக பாஜகவினர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பரப்புரையின் போது அங்கு வந்த செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் (35) என்பவர் தான் ஒரு பாஜக நிர்வாகி எனவும் எனக்கு ஏன் தகவல் அளிக்கவில்லை எனவும்,

பரப்புரைக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் எனக்கு ஏன் பணம் தரவில்லை என ரங்கனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை கீழே தள்ளி மண்டையை உடைத்தார். பின்னர் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேட்பாளரை உள்ளே வரவிடாமல் தடுத்ததோடு, பாஜகவினரை கடுமையாக சாடினார். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட ரங்கன் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இராணுவத்தில் பணிபுரிந்த வந்த ஜெகநாதன், விடுமுறையில் வந்து மதுபோதைக்கு அடிமையாகி கடந்த ஓராண்டாக பணிக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரப்புரையில் ஆங்காங்கே பாஜகவிற்கும் பாமகவிற்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story