தருமபுரியில் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணி

தருமபுரியில் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணி

ஆய்வு செய்த ஆட்சியர்

செட்டிக்கரை அரசு பொறியில் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

தர்மபுரி பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் சட்டமன்ற தொகுதி வாரியாக செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளே வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து வாகனங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கி வைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில்,

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இ.ஆ.ப. தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உட்பட தேர்தல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story