அமைதியாக நடந்த தேர்தல்  காவலர்களுக்கு மாவட்ட எஸ் பி பாராட்டு

அமைதியாக நடந்த தேர்தல்  காவலர்களுக்கு மாவட்ட எஸ் பி பாராட்டு

அமைதியாக நடந்த தேர்தல்  காவலர்களுக்கு மாவட்ட எஸ் பி பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்த பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட காவலர்களுக்கு எஸ்பி பாராட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவை அமைதியாக நடத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பிரச்சினைக்குரிய பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அமைதியாக நடந்து முடிந்தது.

அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மத்திய காவல் படை,தமிழ்நாடு சிறப்பு காவல் படை,தமிழ்நாடு ஆயுதப்படை, மற்றும் தாலுகா காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடங்கிய நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் அதனை பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள், மத்திய ரயில்வே படை, கேரளா ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர்,முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story