மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை

மனைவியை  கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை
மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்துவிட்டு பூச்சி மருந்து குடித்து கணவனும் தற்கொலை
திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியில் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்துவிட்டு பூச்சி மருந்து குடித்து கணவனும் தற்கொலை செய்துக் கொண்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டி சேர்ந்த கருப்பசாமி (70) இவருடைய மனைவி சீதை(65) இவர்களுக்கு 3 மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 11:30 மணியளவில் கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி , வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி சீதை தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த சீதை, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடைய மனைவியை கொன்ற கணவர் கருப்பசாமி அச்சத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். தற்போது அவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தகவல் அறிந்த சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் மற்றும் திருவேங்கடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் மனைவியை கணவரே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story