கோதண்டராமருக்கு திருக்கல்யாண உற்சவம்

கோதண்டராமருக்கு திருக்கல்யாண உற்சவம்

கோதண்டராமருக்கு திருக்கல்யாண உற்சவம்

கம்மவார்பாளையம் கிராமத்தில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ராமநவமி விழாவை முன்னிட்டு, பத்து நாள் திருவிழா நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ராமநவமி விழாவை முன்னிட்டு, பத்து நாள் திருவிழா நடக்கும். பத்தாவது நாள் திருவிழாவில், ராமருக்கும், சீதைக்கும் திருக்கல்யாண உற்சவம் வைபவம் நடக்கும். நடப்பாண்டு திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு,

நேற்று முன்தினம், இரவு 8:00 மணியளவில், மேல தாளங்கள் ஒலிக்க அதிர்வேட்டு முழங்க விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. அதை தொடர்ந்து, 10:30 மணிக்கு ராமருக்கும், சீதைக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ராமர், சீதை, லட்சுமணர்,

ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் வீதியுலா நடந்தன. திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், படுநெல்லி கிராமத்திலும், சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது."

Tags

Read MoreRead Less
Next Story