செங்கல்பட்டில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட வாகனம் திருட்டு

செங்கல்பட்டில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட வாகனம் திருட்டு
வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட வாகனம் திருட்டு, போலீசார் விசாரணை
செங்கல்பட்டில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட வாகனம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு ரத்னம் நகரை சேர்ந்தவர் மகேஷ், 28. இவர், செங்கல்பட்டு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் யமஹா இருசக்கர வாகனத்தை, வழக்கம் போல நிறுத்தி விட்டு சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்து, மகேஷ் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story