சுங்கசாவடி ஊழியரை காரால் மோதிய வாகன ஓட்டி

சுங்கசாவடி ஊழியரை காரால் மோதிய வாகன ஓட்டி
சுங்கசாவடி
கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து கடுப்பாகிய கார் ஓட்டுநர் கட்டணம் செலுத்தாமல் மாற்று வழியில் சொல்ல முற்பட்டபோது தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடி ஊழியரை காரை வைத்து மோதி தள்ளிய காட்சி வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் , திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்த சுங்கச் சாவடியை அங்கிருந்து அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்களில் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சுங்கச்சாவடி ஊழியர்களை, கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகன ஓட்டி ஒருவர் காரை வைத்து ஏற்றி கொல்ல முயலும் CCTV காட்சிகள் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக பேசி தாக்குவதும் உள்ளிட்ட பல்வேறு வீடியோ காட்சிகள் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி செல்லக் கூடிய பதிவு எண் இல்லாத கார்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கார்களும், திருமங்கலம் நகர் பகுதி வாகனங்கள் எனக் கூறி ஏமாற்றி, சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாகி வருவதாகவும், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பின்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் இது போன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்த கேட்டுக்கொண்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது சுங்கச்சாவடி ஊழியர்களை, வாகன ஓட்டிகள் தாக்குவதும், அவர்களை காரை வைத்து மோதுவதும் ஆகிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சுங்கச் சாவடி ஊழியர்களும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதுவும் தொடர்ந்து நிகழாமல் இருக்க மத்திய,மாநில அரசுகள் தலையிட்டு கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றிலுமாக அகற்றுவது அல்லது இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story