திருத்தியமைக்கப்பட்ட விற்பனை முனையம் வழங்கல்

திருமங்கலம் கள்ளிக்குடி தாலுகா நியாய விலை கடைகளுக்கு புதிதாக திருத்தியமைக்கப்பட்ட விற்பனை முனையம் வழங்கப்பட்டு வருகிறது.
நியாய விலைக் கடைகளில் விற்பனை முனையத்தில் பொதுமக்களின் கைரேகை சரிவர இயங்காதது, பரிவர்த்தனை சரியின்மை உள்ளிட்ட புகார்கள் இருந்து வந்த நிலையில் விற்பனை முனையம் புதியதாக திருத்தி வடிவமைக்கப்பட்டு (அப்டேட்) வழங்கபட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை சார்பாக திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகா நியாய விலை கடைகளுக்கு புதிய விற்பனை முனையம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கள்ளிக்குடி தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி புதிய விற்பனை முனையங்களை ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கினார். வட்ட வழங்கல் துறை மண்டல மேலாளர் சாமுவேல் திருத்தியமைக்கப்ட்ட விற்பனை முனையம் குறித்து பணியாளர்களுக்கு விளக்கி கூறினார். இதில் கூட்டுறவு சார்பதிவாளர் சுந்தரமூர்த்தி, திருமங்கலம்மற்றும்கள்ளிக்குடி வட்ட வழங்கல் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் நியாயவிலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story