வழக்கில் கைதான சிறார்களில் ஒருவர் தற்கொலை முயற்சி!

வழக்கில்  கைதான சிறார்களில் ஒருவர் தற்கொலை முயற்சி!

கோவையில் வழக்கில் கைதான சிறார்களில் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


கோவையில் வழக்கில் கைதான சிறார்களில் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
கோவை:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆறு இளைஞர்களும் மூன்று சிறார்களும் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இளைஞர்கள் ஆறு பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மூன்று சிறார்களும் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் 17 வயது சிறுவன் ஒருவர் நேற்றிரவு கைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனை அறிந்த அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது அந்த சிறுவன் உடல்நிலை தேறி விட்டதாக கூறப்படும் நிலையில் சிறுவனின் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story