வேலூரில் கார் கவிழ்ந்து விபத்து

வேலூரில் கார் கவிழ்ந்து விபத்து

விபத்தில் சிக்கிய கார்

வேலூரில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயம்புத்தூர், ஸ்ரீரோஷ் பிரீடம் சதுக்க அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண சைதன்ய பிரயாகா (வயது 40). என்ஜினீயரான இவர் திருத்தணி கோவிலுக்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்றார்.

வேலூர் அருகே கீழ்மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story