நல்லதம்பியா சுவாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா

நல்லதம்பியா சுவாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா

வைகாசி விழா

நல்லாதம்பியா கோயில் வைகாசி உற்சவ திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பரவையில் வைகை ஆறு அருகே அமைந்துள்ள இரண்டாவது நாட்டாமை வகையறா பங்காளிகள் வெள்ளையபிள்ளை ஆகாசம் பிள்ளை வகையறாகளுக்கு பாத்தியபட்ட ஸ்ரீஆவிழியம்மன் ஸ்ரீ நல்லதம்பியாசாமி கோவில் வைகாசி பொங்கல் விழா - முக்கனி படையல் பூஜை விழா வெகு விமரிசையாக சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சுவாமி வீட்டிலிருந்து சுவாமி பெட்டி மேள தாளங்களுடன் கோவிலுக்கு வந்தது தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மா,பலா, வாழை உள்ளிட்ட முக்கனி படையலிட்டு விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அறுசுவையோடு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொறுப்பாளர் சதிஷ் சிறப்பாக செய்திருந்தார்.

Tags

Next Story