வடமாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

வடமாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

தாக்குதல் 

உளிய நல்லூர் பகுதியில் இரவு நேரத்தில் வட மாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த உளியநல்லூர் பகுதியில் சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தன்று இரவு உளியநல்லூர் பகுதியில் கட்டுமான பொருட்களை பாதுகாக்கும் இரவு காவலாளிகளாக வேலை செய்து வந்த 5 பேரை மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் அவர்களை தாக்கி செல்போன், டீசல், கட்டுமான பொருட்களை பறித்து சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆயல் பகுதியை சேர்ந்த சுகுமார் (23) என்பவரை ஏற்கனவே கைது செய்தனர்.

இதுதொடர்பாக ஆயல் பகுதியை சேர்ந்த சூரியா (23) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுதர்சன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story