எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு 20 பேர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் நம்ம அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமினை நகர மன்ற தலைவர் பாஷா துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் 20 பேர் கலந்து கொண்டு 20 யூனிட் இரத்த தானம் செய்தனர் அப்போது தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன் மற்றும் அரசு மருத்துவர்கள் நம்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முருகன் மற்றும் செவிலியர்கள் பல உடன் இருந்தனர்.
Next Story