அறந்தாங்கி- காரைக்குடி இடையே இடைநில்லா பஸ் இயக்க கோரிக்கை!

அறந்தாங்கி- காரைக்குடி இடையே  இடைநில்லா பஸ் இயக்க கோரிக்கை!
பொது பிரச்சனைகள்
அறந்தாங்கி, ஆவுடை யார்கோவில், மணமேல்குடி பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு பணிகள் நிமித்தமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் மதுரைக்கு சென்று வருகின்றனர். இதுதவிர ஏராளமான மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். அறந்தாங்கி காரைக்குடி வழித்தடத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. பெரும்பாலான பஸ்கள் இந்த ஊர்களில் நின்று செல்வதால் பயண நேரம் அதிகமாகிறது. அவசர பணி நிமித்தமாக செல்வோர், அலுவலர்கள், மாணவர்கள் வசதிக்காக அறந்தாங்கி யில் இருந்து காரைக்குடிக்கு காலை நேரத்தில் இடைநில்லா பஸ் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story