இன்ஸ்டாகிராம் பழக்கம் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இன்ஸ்டாகிராம் பழக்கம் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
சங்ககிரி:இன்ஸ்டாகிராம் பழக்கம் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது... சங்ககிரி, பயணியர் விடுதி சாலை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உத்திரகுமார் மகள் பவனிஸ்ரீ (20). அவருக்கும் தேவண்ணகவுண்டனூர் கிராமம், மட்டம்பட்டியை சேர்ந்த சசிகுமாருக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பவனிஸ்ரீ இன்ஸ்டாகிராம் மூலம் அறந்தாங்கி சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு விளையாடிச் சென்று விட்டார். இது குறித்து தகவலறிந்த அப்பெண்ணின் தந்தை மீண்டும் அழைத்து வந்து சங்ககிரி வீட்டில் தங்க வைததுள்ளார். அதனையடுத்து அப்பெண்ணின் கணவர் வீட்டிற்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். கணவரது வீட்டில் தேநீர் வைப்பதற்காக கணவரை பால் வாங்க கடைக்கு அனுப்பி விட்டு கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்திரகுமார் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story