சங்கராபுரத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரத்தில் முப்பெரும் விழா
விழா
சங்கராபரம் வள்ளலார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பொது சேவை நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி,ரோட்டரி முன்னாள் தலைவர் முர்த்தி முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேருராட்சி தலைவர் ரோஜாரமணி, செல்வராஜ்,குசேலன் பரிசு வழங்கினர்.சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் தலைவி சுபாஷினி ரமேஷ்,செயலாளர் உஷாதேவி,பாண்டலம் அரிமா சங்க தலைவர் குமார், ஆகிய புதிய நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர்.மோட்டார் வாகன சங்க தலைவர் திருவேங்கடம்,ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார்,மதியழகன்,அரிமா மாவட்ட தலைவர் வேலு வாழ்த்துரை வழங்கினர்.பள்ளி தலைமை ஆசிரியை குமாரி நன்றி கூறினார்.
Next Story