விஷ தேனீக்களை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!

விஷ தேனீக்கள்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி, இவர் வீட்டின் அருகிலுள்ள தென்னை மரத்தில் விஷ தேனீக்கள், கூடுகட்டி அச்சுறுத்தி வருவதாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே. நேற்று தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு சென்று தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷத்தேனீக்களை அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story