மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

கைது
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், தம்மம்பட்டி 5-ஆவது வார்டு பகுதியில் வசிப்பவர் குமார். இவர் கஞ்சா போதையில் நேற்று 3-ஆவது வார்டு பகுதியில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சகுந்தலா (73) என்ற மூதாட்டியின் காதில் இருந்த தங்க நகையை பறித்து சென்றுள்ளார். உடனடியாக பொதுமக்கள் அவரை பிடித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story