ராமநாதபுரத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு.

ராமநாதபுரத்தின் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு.
ராமநாதபுரம் மாவட்டத்தின் 87 புதிய ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்படுவது வழக்கம், இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு தலைமை செயலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இதற்கு முன்‌ ராமநாதபுரம் úமாவட்ட ஆட்சியராக இருந்த 'விஷ்ணு சந்திரன்' அனைவருக்கும் நன்றிக்கடிதம் எழுதி அதில்,, 'ராமநாதபுரம் பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கலெக்டராக ஒராண்டு இரண்டு மாதங்கள் பணி புரிந்துள்ளேன். இக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்' என, குறிப்பிட்டு பணிமாற்றம் காரணத்தால் விடைபெற்று சென்றார்.  இதனைத் தொடர்ந்து, புதிய மாவட்ட ஆட்சியராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை, 'சிம்ரன்ஜீத் சிங் காலோன்' கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த புதிய ஆட்சியர், இதற்கு முன் தான் பணியாற்றிய பொறுப்புகளை குறிப்பிட்டு, இம்மாவட்டத்தில் சாமானியர்களின் அதிகபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் கவனம் செலுத்துவேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story