தவறி விழுந்த ஆசிரியர் பலி

தவறி விழுந்த ஆசிரியர் பலி
பலி
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்,40; இவர் சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சின்னசேலம் செங்குந்தர் தெருவில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு மாடி படிக்கட்டில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story