கோத்தகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

கோத்தகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
நீலகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
நீலகிரி கோத்தகிரியில் அதிமுக சார்பில் தொடர்ந்து 3 வது முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவியேற்று 3 ஆண்டுகளாக தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர்வரி, பத்திரபதிவு , மின் கட்டண உயர்த்தி உள்ளதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இந்த நிலையில் தமிழகத்தில் முன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தியும் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு .பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து கோத்தகிரி மார்க்கெட் திடலில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெய்சீலன் முன்னிலையில் கழக அமைப்பு செயலாளர் KR அர்ஜுனன் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நகர கழக ஒன்றிய நிர்வாகிகள் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story