ராமநாதபுரம் நிதிநிலை அறிக்கை விவசாய சங்கங்கள் வரவேற்பு
Ramanathapuram King 24x7 |23 July 2024 11:55 AM GMT
மத்திய அரசு நிதிநிலை அறிக்கை எம்எஸ்கே. பாக்கியநாதன் தலைவர் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் வரவேற்பு
பாரத பிரதமர் மோடி அவர்களது தலைமையின் கீழ் 2044-2025ஆம் ஆண்டிற்காண நிதிநிலை (பொது பட்ஜெட்)11 வது முறையாக தாக்கல் செய்யப்பட்டதில் இந்திய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் அளவிற்கு அறிவுப்பு பாராட்டுக்கள் பல இந்திய பேரரசின் இறையாண்மை மற்றும் உணவு பயன்பாட்டுக்கு உற்ற துணையாக உழைக்கும் வர்க்கம் விவசாயிகள்தான் இந்தியாவில் 80/பொதுமக்கள் விவசாயம் சார்ந்தே வாழ்கின்றனர் இந்தியாவின் ஜிடிபி ஏற்றம் பெற உழைப்பவர்கள் உழவர்களே.இந்தியாவின் ஒட்டு மொத்த நிதிநிலை அறிக்கை47.66இலட்சம் கோடிகளில் விவசாயத்துறைக்கு 1.52இலட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதை பெருமையோடு வறவேற்கின்றோம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒருகோடி விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி பட்டையம் சான்றிதழ் வழங்கப்படும் என்ற நிதிநிலை அறிவிப்பு பாராட்டுக்குறியவை குறித்த 109 வகையான32ரக பயிர்களை அறிமுகப்படுத்தி அதனை விளம்பரம் செய்து விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பது வரவேற்க கூடியது பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு அடைய சேமிப்பு மற்றும் சந்தைபடுத்த ஏற்ற சூழலை உருவாக்க 10.000 உயிர்வள மையங்களை அரசு நிறுவும் என்ற அறிவிப்பு அருமை 6கோடி விவசாயிகள் மற்றும் அவர்களது நிலங்களை டிஜிட்டல் பதிவேட்டில் ஒருங்கிணைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கின்றோம் தற்போதைய நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏற்றம் அளிக்ககூடியதாகவும் உத்வேகம் மிகுந்ததாக உள்ளது பொது பட்ஜெட் ஆகும் என வைகை பாசன விவசாய சங்கம் தலைவர் எம்எஸ்கே பாக்கியநாதன் தெரிவித்தார்
Next Story