உக்கரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்

உக்கரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
உக்கரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உக்கரம் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் 'மக்களுடன் முதல் வர்' திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வடிப்பக அலு வலர் (சக்தி சர்க்கரை ஆலை) தலைமை தாங்கினார். சத்திய மங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அப்துல் வகாப், சத்தியமங்கலம் வருவாய் தாசில்தார் சக்திவேல், உக்கரம் ஊராட்சி தலைவர் எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி. பி.இளங்கோ குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் உக்கரம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர். மொத்தம் 600 மனுக்கள் பெறப்பட்டன. இவை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. முகாமில் ஊராட்சி தலைவர்கள் குமரேசன் என்கிற செந்தில்நாதன், எம்.ராஜாத்தி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.என்.சின்னச்சாமி, சம்பத்குமார் மற்றும் மண்டல துணை தாசில்தார் திருமூர்த்தி, அனைத்து துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story