மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டண உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அரக்கோணத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு மற்றும் நியாய விலை கடைகளில் பாமாயில் பருப்பு போன்றவற்றை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வரும் திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள 82 அதிமுக மாவட்ட தலைமை இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலைய அருகில் அதிமுக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் , அஇஅதிமுக துணை கொரடா, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு ரவி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின் கட்டண உயர்வு, நியாயவிலை கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை திமுக அரசு நிறுத்த முயற்சி மேற்கொள்வதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆஇஅதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story