முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார்.
விருதுநகரில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விருதுநகர் அருகே முளிபட்டியில் உள்ள ஸ்ரீ தவசலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியின் குலதெய்வ கோயிலாகும். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு குலதெய்வ கோயிலில் அவர் சார்பில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய ராஜேந்திர பாலாஜிக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அதன்பின்னர் பக்தர்கள்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மின் கட்டண உயர்வை கண்டித்து விருதுநகரில் கே. டி. ஆர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் கே.டி.ஆர் க்கு வேல் ஒன்றினை நினைவு பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Next Story