சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்
காங்கேயம் அடுத்த நத்தக்கடையூரில் தங்கி லோடுமேன் வேலை பார்ப்பவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் வயது 32. இவரது நண்பரின் உறவினர் பெண்ணான 17 வயது சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி நாகப்பட்டினத்தில் இருந்து அழைத்து வந்து கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமி தமிழரசன் தங்கி இருந்த அறையில் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து வெளியேறி காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். அதன் அடிப்படையில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் தமிழரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story