ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

திருவாடானையில் அரசு வழங்கிய சிம்கார்டுகளை திரும்ப ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
திருவாடானையில் கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு சிம் கார்டுகளை மண்டல துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பட்டத்தில் ஈடு பட்டனர். அதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றும் விதமாக செயல்படும் வருவாய் நிர்வாக ஆணையரின்  நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாநில நிர்வாக ஆணையருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து, அரசால் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கிய சிம் கார்டுகளை மண்டல துணை வட்டாச்சியரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.  இந்த போராட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story