கருமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

5 ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை கோரிக்கையை மனுக்களாக அளித்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருமாத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கருமாத்தூர், கோவிலாங்குளம், புள்ளனேரி, கண்ணனூர், பண்ணியான் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டீஸ்வரிஇளங்கோவன், ஜெயந்திமுத்துராமன், மார்க்கண்டன், தமிழ்ச்செல்விதமிழரசன், காசிநாதன் ஆகியோர் தலைமையிலும், உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி,கீதா, ஊரக வளர்ச்சி தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் ராஜா, உதவி பொறியாளர்கள், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, மருத்துவ துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 29 அரசுத்துறைகள் இம்முகாமில் தனித்தனியே அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலாங்குளம், கருமாத்தூர், புள்ளனேரி, கண்ணனூர், பண்ணியான் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர். தரப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Next Story