சென்னையில் அமைய உள்ள அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரம் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை நன்கொடையாக வழங்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார்.

சென்னையில் அமைய உள்ள அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரம் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை நன்கொடையாக வழங்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை..
சென்னையில் அமைய உள்ள அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரம் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை நன்கொடையாக வழங்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “ இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் 75-வது சுதந்திர தினவிழாவில் அறிவித்தார். அதனைத்தெடார்ந்து, சென்னை மெரினா கடற்கரை எதிரே பாரம்பரியக் கட்டிடமான ஹூமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பில் பெரிய அளவிலான அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைத்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் சேகரித்து வைத்துள்ள சுதந்திரம் போராட்டம் குறித்து பழங்கால ராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ. சீருடைகள், ஐ.என்.ஏ அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை வேலூர் கோட்டையில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் நேரிடையாக சென்று வழங்கலாம். வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையர் மூலமாக வழங்கப்படும். அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது, அதை வழங்கியவர்களின் பெயர்கள் இடம்பெறும். இந்த அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரம் போராட்டம் தொடர்பான பொருட்களை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story