உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு எயிம் செஸ் அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி..

உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு எயிம் செஸ் அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி..
உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு எயிம் செஸ் அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே. சமுத்திரத்தில். உள்ள ஞானோதயா இண்டர் நேஷனல் பள்ளியில் உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு எயிம் செஸ் அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை ஞானமணி கல்வி குழுமங்களின் தலைவர் முனைவர் அரங்கண்ணல் மற்றும் துணை தலைவர். திருமதி மாலாலீனா குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். -இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ராயல்கிங் செஸ் அகடாமியின் பயிர்ச்சியாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் 10-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களின் முன்னிலையில் மாணவ மாணவிகள் போட்டியிட்டனர். கிப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் திருமதி. ரோஸ்லின் பபிதா பரிசுகளை வழங்கினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.
Next Story