கார் லாரி நெருக்கு நேர் மோதி விபத்து இருவர் பலி

காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து இரண்டு பேர் பலி ஊதியூர் காவல் துறை விசாரணை
காங்கேயம் அடுத்த ஆலம்பாடி ஊராட்சியில் ஆவின் பால் செக்ரட்டரியாக பணியாற்றி வருபவர் பேபி 45. பேபிக்கு ஒரே மகள் உள்ளார் அவர் ரஞ்சனி பிரியா 25. கல்லூரி படிப்பு முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத பயிற்சி எடுத்துக் கொண்டு உள்ளார். இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்ல பேபி முடிவெடுத்து மகள் ரஞ்சனி பிரியா மற்றும் உறவினர் சிவக்குமார் பால்பண்ணையில் ஓட்டுநராக பணிபுரியும் பெரியசாமி ஆகியோருடன் ஸ்கர்ப்பியோ காரில் சென்று விட்டு திரும்பி ஊர் வந்து கொண்டிருந்தபோது கருக்கம்பாளையம் அருகே வரும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு டது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பெரியசாமி மற்றும் ரஞ்சனி பிரியா ஆகியோர்  காருக்குள் படுகாயத்துடன் மாட்டிக்கொண்டனர். பின்னர் காங்கேயம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் மாட்டியிருந்த இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு 4 வரையும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ரஞ்சனி பிரியா மற்றும் ஓட்டுநர் பெரியசாமி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும் பேபி சிவக்குமார் ஆகிய இருவரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சைக்கு பின் கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து ஊதியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் ஓட்டுநர் மற்றும் மகள் இருந்ததும் தாய் மற்றும் உறவினர் படுகாயம் அடைந்ததும் காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story