காங்கேயத்தில் வழி தவறி வந்த மான் வேலியில் சிக்கி பலி

காங்கேயம் கே.ஜி.கே நகர் அருகே வழி தவறி வந்த புள்ளிமான் வேலியில் சிக்கி பலியாகியது
காங்கேயம் கரூர் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் பின்புறம் உள்ள கே.ஜி.கே நகருக்கு அருகாமையில் சுமார் 4 ஏக்கர் காட்டிற்குள் 1.5வயதுடைய புள்ளிமான் ஒன்று வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்து ஆடுகளுடன் மேய்ந்து சுற்றியுள்ளது. இதனை பார்த்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வேலியில் சிக்கி இருந்த புள்ளிமான வலை வீசி பிடித்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பிடிபட்ட அந்த புள்ளி மான் சிறிது நேரத்தில் பயத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து ஊதியூர் வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு ஊதியூர் காப்புக்காடு பகுதியில் இறந்த மானை புதைத்தனர்.
Next Story