மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக முத்தூர் அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதாக தமிழ் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 850 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவிகளிடம் அங்கு  தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் முத்தூர் பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 58) என்பவர் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து மேலும் 1098 ஆன்லைன் உதவி மையத்திற்கு புகார் அளித்துள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியைகளை கொண்ட ஒரு குழு அமைத்து மாணவிகளிடம் விசாரணை செய்து வந்தார். இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வந்திருந்த நிலையில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் ரவிச்சந்திரனை இன்று கைது செய்து விசாரணை நடத்திவந்தனர். பின்னர் மாணவிகளிடம் ஆபாசமாக தகாத வார்த்தைகள் பேசி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். முத்தூர் பகுதியில் பள்ளி மாணவிகளிடையே ஆபாசமாக பேசி ஆசிரியர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story