காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை!

காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை!
கோவில்பட்டியில் காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியில் காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார் மகன் சவுந்தர் (23). சென்னையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளான காதலித்து வந்துள்ளார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். கடந்த 15 தினங்களாக காதலி பேசவில்லையாம். இதனால் அவர் காதலியை தேடி சென்றுள்ளார். ஆனால் காதலி அவரை பார்க்க மறுத்து விட்டாராம். இதில் மனமுடைந்த சவுந்தர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story