தூத்துக்குடிபி.எம்.சி பள்ளியில் விளையாட்டு விழா!

தூத்துக்குடிபி.எம்.சி பள்ளியில் விளையாட்டு விழா!
தூத்துக்குடி, மில்லர்புரம், பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி, மில்லர்புரம், பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 29வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஸ்டீபன் தியாகராஜன் , அவரது துணைவி மெர்ஸி ஸ்டீபன் (ஹோலிகிராஸ் இஞ்சினியரிங் கல்லூரி உடற்கல்வி இயக்குநர்) ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பால்கனி வரவேற்புரை ஆற்றினார். விழாவின் தொடக்கமாக மாணவியரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தேசிய மாணவர் படை, ஜுனியர் ரெட் கிராஸ், சாரண சாரணியர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. தேசிய, மாநில அளவிலான விளையாட்டுகளில் வெற்றி பெற்ற வீரர்கள் பெருமிதத்துடன் அணிவகுத்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர் ஸ்டிபன் போட்டிகளைத் தொடங்கிவைக்க பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர். சிறப்பு விருந்தினர் மெர்ஸி தங்களது உரையில் விளையாட்டினால் உடலுக்கும், எதிர்காலத்திற்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜுலியட் பிரேம்குமாரி விளையாட்டு ஆண்டறிக்கையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வர் ஜேன் மேத்யூ நன்றியுரை ஆற்றினார்.
Next Story