கலைஞர் கனவு இல்ல வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி
Maduranthakam King 24x7 |25 July 2024 8:31 AM GMT
சித்தாமூர் ஒன்றியத்தில் 512 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்ல வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளில் உள்ள 512 நபர்களுக்கு ரூபாய் 3.50 லட்ச ரூபாய் மதிப்பிலான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டுக்கான வீடு கட்டுவதற்கான பணி உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, ஒன்றிய கழக செயலாளர் சிற்றரசு ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, ஒன்றிய பெருந்துணை தலைவர் பிரேமாசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையப் படிவத்தை வழங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன், தலைவர் குமுதாமதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story