முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தேமுதிக கட்சி சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தேமுதிக கட்சி சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று ஆளும் திமுக அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்படுவதை கண்டித்தும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story