நகராட்சி நிர்வாக துறை அமைச்சருடன் குமாரபாளையம நகர மன்ற தலைவர் சந்திப்பு

நகராட்சி நிர்வாக துறை அமைச்சருடன் குமாரபாளையம  நகர மன்ற தலைவர் சந்திப்பு
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் அடிப்படைகள் வசதிகள் செய்ய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரை நகர மன்ற தலைவர் நீரில் சந்தித்து கோரிக்கை
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் உயர்திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, குமாரபாளையம் நகர மன்ற தலைவர் வடக்கு நகர திமுக பொறுப்பாளர் த.விஜய் கண்ணன் குமாரபாளையம் நகராட்சியில் செயல்படுத்த வேண்டிய மழைநீர் வடிகால் (சாக்கடை வசதி ), தார் சாலை அமைத்தல், நகரப் பகுதியில் உள்ள கோம்பு பள்ளங்களை சீரமைத்தல் மற்றும் ஊராட்சி கோட்டை காவேரி ஆற்று பகுதியிலிருந்து குமாரபாளையம் நகரத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைத்து சுத்தமான குடிநீர் வழங்குவது மற்றும் குமாரபாளையம் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தார்கள். நகர மன்ற உறுப்பினர் இனியா ராஜ் உடன் இருந்தார்.
Next Story