ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி முன்னிட்டு வளையல் அலங்காரம் செய்ய ஏற்பாடு..

ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி முன்னிட்டு வளையல் அலங்காரம் செய்ய ஏற்பாடு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆடி மாதம் முழுவதும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் கோவில் பூசாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு 50,000 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு அதற்காக ஏராளமான பெண் பக்தர்கள் வளையல் கோர்க்கும் நிகழ்ச்சிகள் பங்கேற்று ஆர்வமாக வளையல்களை சேர்த்தனர். வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை சிறப்பு பூஜைகள் அபிஷேகம் செய்த பிறகு அம்மனுக்கு இந்த வளையல் அலங்காரம் செய்யப்படும் என கோவில் பூசாரிகள் தெரிவித்தனர்.
Next Story