சூளகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி

சூளகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி
மாணவர் விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழப்பு
சூளகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழப்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த காமன்தொட்டி என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பரணிதரன் 22 என்ற மாணவர் பெங்களூர் உள்ள தனியார் இன்ஸ்டியூட்டில் ஏரோ நாட்டிக் ( Private Institute Aeronautic) படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பரணிதரன் பெங்களூர் இருந்து திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்க்கு செல்வதற்க்காக R15 என்ற இருசக்கர வாகனத்தில் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்த , முன்னே சென்றுக்கொண்டிருந்த ஒரு காரை பரணிதரன் முந்த‌ முயன்றதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இருசக்கர வாகனம் முந்த முயன்ற போது, கார் உரசியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பரணிதரன் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது, பின்னர் சாலையிலே விழுந்த பரணிதரன் முன்னே சென்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி கல்லூரி மாணவர் பரணிதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story