சிவகாசியில் நடந்தது ஆணவக் கொலை அல்ல எஸ் பி விளக்கம்

சிவகாசியில் நடந்தது ஆணவக் கொலை அல்ல எஸ் பி விளக்கம்
சிவகாசியில் நடந்தது ஆணவக் கொலை அல்ல எஸ் பி விளக்கம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று இரவு கார்த்திக் பாண்டியன் என்பவர் அவர் காதல் திருமணம் செய்த அவரது மனைவி நந்தினி என்பவரது சகோதரர்கள் பாலமுருகன்,தனபாலமுருகன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோரால் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.இந்த கொலை சம்பவத்தை ஆணவக்கொலை என்று தவறாக சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.இது ஆணவக்கொலை அல்ல.இறந்தவரும் அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.இறந்தவர் திருமணம் செய்து அதே பகுதியில் வாழ்ந்து வருவது பிடிக்காமல் அவரிடம் குற்றவாளிகள் இருவரும் தகராறு செய்துள்ளார்கள்.மேலும் சமீபத்தில் அவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.அதனால் ஆத்திரமடைந்து இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது.எனவே தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story