மதுரையில் அரசுப் பேருந்து மோதி முதியவர் பலி!*

மதுரையில் அரசுப் பேருந்து மோதி முதியவர் பலி!*
சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விராதனூர் அருகே உள்ள நெடுங்குளத்தில், மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புதுர்வா (வயது 55). காவலாளி. இவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் லோகேஷ் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர், சிகிச்சை பலனின்றி காவலாளி புதுர்வா உயிரிழந்தார். 11 ம் வகுப்பு படிக்கும் மாணவன் லோகேஷ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story