மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மா.கம்யூ., வட்டக்குழு சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கொளஞ்சி, மாரியாப்பிள்ளை, பரதன், சக்திவேல், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட குழு உறுப்பினர்கள் தனலட்சுமி, மணி, அருள்தாஸ், பெரியசாமி, செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழக அரசை நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டிப்பது, மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இலவச மின்சாரம் வீடுகளுக்கும், விவசாயத்திற்கும் தொடர்ந்து வழங்க வேண்டும். மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மின்சார கட்டணத்தில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி மின்துறையை சீரழிக்க கூடாது, புதிய மின் உற்பத்தி கூடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story