காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் காங்கேயத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானார். கடந்த ஆண்டு நீதிமன்ற ஜாமினில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். காங்கேயம் காவல்துறை ஒரு வருட காலமாக தேடப்பட்டு வந்த அண்ணாமலையை காங்கேயம் உதவி ஆய்வாளர் கார்த்திக் கைது செய்து நேற்று காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.
Next Story

