சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்எல்ஏவுமான மோளியபள்ளி ராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழா

சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்எல்ஏவுமான மோளியபள்ளி ராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழா
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோளிப்பள்ளி வி.ராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழா திருச்செங்கோடு கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவரும்,வரவேற்பு குழு தலைவருமான ஏ.ஆதிநாராயணன் வரவேற்புரை ஆற்றினார். நூற்றாண்டு விழா மலரை மத்திய குழு உறுப்பினர் பி.சண்முகம் வெளியிட அதை கட்சியின் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி பெற்றுக் கொண்டார் . கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி, டி.ரவீந்திரன், சே.முத்து கண்ணன், மற்றும் சேலம் மாவட்ட கட்சி செயலாளர் மேவை சண்முகராஜா, ஈரோடு மாவட்ட செயலாளர் இரா.ரகுராமன், நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள் , திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, வரவேற்புக் குழு பொருளாளர் மனோகரன், வரவேற்பு குழு கமிட்டி தோழர் ஐ.ராயப்பன், இடைக்குழு செயலாளர்கள்,சிஐடியு தொழிற்சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர், வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் விழா நிகழ்வின் ஒரு பகுதியாக தோழர் வி.ஆர் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய படத்தொகுப்பு கண்காட்சி அரங்கை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் திறந்து வைத்தார். விழாவின் நிறைவாக வரவேற்பு குழு செயலாளர் கணேச பாண்டியன் நன்றி உரையாற்றினார்.
Next Story