விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மின் கட்டணம் உயர்வுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மின் கட்டணம் உயர்வுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மின்கட்டண உயர்வுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்
நமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாநில செயலர் துரைசாமி பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். துரைசாமி பேசியதாவது: விவசாய பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் வந்து விட்டதால், போதிய வேலை வாய்ப்பு இல்லாமல், சொற்ப வருமானம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் திண்டாடி வரும் நிலையில், இந்த மின் கட்டண உயர்வு கடும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனை ரத்து செய்து உதவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கிளை செயலர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சித்ரா, ரேவதி, முருகேசன், சின்னதாயி, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story