பட்டா பெயர் மாற்றம் செய்ய அதிகாரிகள் லஞ்சம். விவசாயி ஆட்சியரிடம் புகார்.

பட்டா பெயர் மாற்றம் செய்ய அதிகாரிகள் லஞ்சம். விவசாயி ஆட்சியரிடம் புகார்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய அதிகாரிகள் லஞ்சம். விவசாயி ஆட்சியரிடம் புகார். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, மேட்டு மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமலை. இவர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கரூர் ஆட்சியர் கூட்டரங்கில்,இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயியாக பங்கேற்றார். அப்போது அவர், வருவாய்த்துறை அலுவலகத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவே புகார் கூறினார். புகாரைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆயினும், உங்களது புகார் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு அடங்கியது.
Next Story